• May 01 2025

என்னைப் பின் தொடர வேண்டாம்...ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த தளபதி விஜய்..!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் திரையரங்கில் மட்டுமல்லாது, சமீப காலமாக அரசியல்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் தளபதி விஜய். 'ஜனநாயகன்' திரைப்பட வேலைகளுக்காக கொடைக்கானல் செல்லவுள்ள விஜய், அதன் முன்னோடியாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ரசிகர்கள் மற்றும் தனது இயக்க தொண்டர்களிடம் அவர் கூறிய வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் வைரலான தருணங்களையும் உருவாக்கியுள்ளன.


செய்தியாளர்கள் மத்தியில் விஜய் கூறியதாவது,“யாரும் என்னுடைய வேலைக்கு பின்னாலோ, காருக்கு பின்னாலோ பின் தொடர வேண்டாம். நான் என் வேலையைப் பார்க்கப் போகிறேன். நீங்கள் உங்களது வேலையைப் பாருங்கள்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வாசகங்கள் மூலம், விஜய் தன்னுடைய சுற்றுப் பயணங்களை ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தடுத்து நிறுத்தும் சூழ்நிலை ஏற்படக்கூடாது என்பதையும், அனைவரும் தங்கள் தொழிலிலும், வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றார்.


விஜய் தற்போது நடித்து வரும் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’, தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் இந்த படம், விஜயின் அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகின்றது.

விஜயின் எச்சரிக்கை மிகச் சாதாரணமா இருந்தாலும் அது ஒரு தலைவரின் பொறுப்புணர்வு மற்றும் மக்கள் நலத்தையும் பிரதிபலிக்கிறது. அவரது ரசிகர்களும், தொண்டர்களும் அதை மதித்து, பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement