• Jun 26 2024

'வாடிவாசல்’ படத்திற்கு வாய்ப்பே இல்லை.. அடுத்த படத்திலும் கமிட் ஆனார் சூர்யா..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட ட்ராப் என்று கூறப்பட்டது. குறிப்பாக இந்த படத்தில் அமீர் இணைந்ததை அடுத்து சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் இதனை அடுத்து சூர்யாவுக்கு பதில் வேறு நடிகர் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் அளித்த  பேட்டியில் ’விடுதலை 2’ படம் முடிந்த பிறகு 'வாடிவாசல்’ படத்தை தொடங்க இருப்பதாகவும் சூர்யா கண்டிப்பாக அந்த படத்தில் நடிப்பார் என்றும் கூறினார்.  ஆனால் இதற்கு சூர்யாவிடம் இருந்து எந்த பாசிட்டிவ் பதிலும் வராத நிலையில் தற்போது அவர் மறைமுகமாக 'வாடிவாசல்’ படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் அடுத்த படத்தின் இயக்குனரையும் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.

ஜிவி பிரகாஷ் நடித்த ’புரூஸ்லி’ மற்றும் விமல் நடித்த ’விலங்கு’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் தான் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

எனவே 2026 வரை சூர்யா பிஸியாக இருப்பதால் 'வாடிவாசல்’ படத்திற்கு வாய்ப்பே இல்லை என்பதை சூர்யா மறைமுகமாக வெற்றிமாறனுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement