• May 06 2024

மாரியுடன் ரொமான்ஸ் பண்ணும் சூர்யா- நிச்சயதார்த்தத்தில் ஜாஸ்மின் செய்த சதி - மாரி சீரியல் அப்டேட்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சூர்யா ஜாஸ்மின் நிச்சயதார்த்தத்திற்கு ரெடியாகி கொண்டிருக்க அப்போது சூர்யாவின் மனசாட்சி வந்து சூர்யாவை திட்டுகிறது‌.

அப்போது மாரி வர சூர்யாவை பார்த்து அழகாய் இருப்பதாக சொல்கிறாள். அடுத்து சூர்யா சட்டை பட்டன் ஒன்று அறுந்திருக்க அதை கவனித்த மாரி இருங்க நான் தைத்து விடுகிறேன் என்று சொல்லி ஊசி எடுத்து பட்டன் தைக்கிறாள்.


அப்போது ஊசி மாரியின் கையில் குத்தி விட ரத்தம் வர உடனே சூர்யா தன் வாயால் எடுத்து மாரியின் விரலை சப்ப அப்போது அந்த பக்கம் வரும் ஜாஸ்மின் அதை பார்த்து கடுப்பாகிறாள்.

பின்னர் கடுப்பான ஜாஸ்மின் மாரியை அசிங்கப்படுத்த கூல்ட்ரிங்க்ஸில் சரக்கு கலந்து மாரிக்கு கொடுத்து பங்க்ஷனில் அசிங்கப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு குடிக்க வைக்கிறாள்.அடுத்து நிச்சயதார்த்தம் ஆரம்பிக்க சூர்யா, ஜாஸ்மின் என இருவரும் மாலை மாற்றிக் கொள்ள ஜாஸ்மின் சந்தோசமாக இருக்கிறாள்.

 அப்போது ஜாஸ்மின் சூர்யாவின் கைக்கு மோதிரம் போட சூர்யா ஜாஸ்மின் கைக்கு மோதிரம் போடும்போது திடீரென மாரி குடி போதையில் நிறுத்துங்க என சத்தம் போடுகிறார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement