• May 03 2024

பிரபல முன்னணி நடிகரை பயன்படுத்தி சூர்யாவை கேலி செய்த பாலா- மோதலுக்கு இது தான் காரணமா?- கொந்தளிக்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் விக்ரம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தும் அசத்தி வருகின்றார். 

இது தவிர சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. மேலும் சூர்யாவின் கெரியரில் முக்கியமான இயக்குநராக இருப்பவர் தான் பாலா.இதனால் பாலா இயக்கத்தில் சூர்யா வணங்கான் என்னும் படத்தில் நடித்து வந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் அப்படம் இடை நிறுத்தப்பட்டது.


இதற்கு படப்பிடிப்பில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என கூறப்பட்டது.இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் பாலா இக்கதை சூர்யாவிற்கு பொருத்தமாக இருக்காது என்ற காரணத்தினால் சூர்யா இப்படத்திலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.


இது ஒரு புறம் இருக்க தற்பொழுது புதிய தகவல் ஒன்று வெளியாகி வருகின்றது. அதாவது சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் பிதாமகன். இப்படத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தின் போது சூர்யாவிற்கும் பாலாவிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக தற்போது தகவல் வந்துள்ளது. 

அதாவது படத்தில் தன்னை விட விக்ரமிற்கு தான் முன்னுரிமை தரப்பட்டதாகவும், விக்ரமின் காதாபாத்திரதிற்கு முக்கியத்துவம் தரப்பட்டதாகவும் கூறி சூர்யாவிற்கு இயக்குநர் பாலாவின் மீது வருத்தம் இருந்ததாம். ஆனால் நாளடைவில் அந்த மனக்கசப்பு நீங்கி இருவரும் பழைய நிலைக்கு திரும்பினார்கள். இதையடுத்து தற்போது வணங்கான் படத்தின் மூலம் மீண்டும் இருவருக்கிடையே விரிசல் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement