• May 03 2024

பூஜையுடன் ஆரம்பமான சூர்யா 42 படப்பிடிப்பு... மலர் தூவி வணக்கம் செலுத்தும் கதாநாயகன்... வெளியாகிய புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று பால்லாயிரக்கணக்காக மக்கள் மனங்களில் குடியிருக்கின்ற ஒரு வெற்றி நாயகனே நடிகர் சூர்யா. சமீபகாலமாக இவரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக சாதனை படைத்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றன.


அதிலும் சமீபத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் கதாநாயகனாக நடித்து வெளியாகிய 'விக்ரம்' படத்தில் இவர் ரோலக்ஸ் என்னும் கேமியோ ரோலில் நடித்து உலகெங்கிலும் மிகப் பெரிய அளவில் பேசப்படும் நடிகராக மாறியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து இடையிடையே 'வாடிவாசல்' படத்திற்காக சூர்யா காளையுடன் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள் வெளியிடப்பட்டன. இதனை தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா 'வணங்கான்' என்ற படத்தில் நடித்து வந்தார். தற்போது வாடிவாசல் மற்றும் வணங்கான் ஆகிய படங்களின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்த நிலையில் நம்ம சூர்யா தற்பொழுது இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து தனது 42 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படம் ஆனது 2 பாகங்களாக தயாரிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



அத்தோடு இப்படத்திற்கான பூஜை நிகழ்வு சென்னை ராமாபுரத்தில் நடைபெறும் என நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படம் பூஜை இன்று நடக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. அதன்படி இன்று சூர்யா 42 படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இந்த பூஜையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 



Advertisement

Advertisement

Advertisement