• May 06 2024

சேலையில் வந்த பிரியங்கா... மேடையில் வைத்துப் பங்கம் பண்ணிய சிறுவன்... சூப்பரான ப்ரோமோ வீடியோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இதனை பிரியங்கா மற்றும் மகாபா தொகுத்து வழங்கி வருகின்றனர்.


இவர்கள் இருவரும் நகைச்சுவை நிறைந்த தமது பேச்சுக்களினால் நிகழ்ச்சியைப் போரடிக்காது கொண்டு சென்று வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் தான் senior super singer-9 இடம்பெற்று முடிந்தது. இதனையடுத்து தற்போது சிரியவர்களுக்கான 9வது சீசன் வெற்றிகரமாக ஆரம்பமாக இருக்கின்றது. 


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் சிறுவன் ஒருவன் பாடலைப் பாடுகின்றார். அப்போது இடையில் விக்கி தடங்கல் ஏற்படுகின்றது. எதனால் என்று பாடகி சித்ரா கேட்கின்றார். அதற்கு அந்த சிறுவன் "ஏசியில் நின்றதால் தான்" என்கிறார். அதற்கு மாகாபா "அப்போ நிகழ்ச்சியை மொட்டை மாடியில் வைக்கலாமா" எனக் கிண்டலாக கேட்கின்றார்.  


பின்னர் இசையமைப்பாளர் தமன் "எதனால் 2-ஆவது சரணம் பாடவில்லை" எனக் கேட்கின்றார். அதை மணியண்ணாவிடம் கேளுங்க என சிறுவன் பதிலளிக்கின்றார். மேலும் பிரியங்காவை பார்த்து "கனவில் மட்டும் காணும் அழகை கடையில் போட்டுக் காட்டுறியே" என பிரியங்காவை பார்த்து அந்த சிறுவன் பாடுகின்றார். அதற்கு தமன் நீ எதற்கு பிரியங்காவை பார்த்து பாடினாய் எனக் கேட்கின்றார். இன்னைக்கு தான் அவங்க சேலை போட்டுப் பாக்கிறேன் என சிறுவன் பதிலளிக்கின்றார்.

இதனைப் பார்த்ததும் அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement