• Apr 30 2024

கார்த்திக் பற்றிய உண்மைகளை அறிந்து கொண்ட அனு- சொத்து விஷயத்தில் சுந்திரியின் மாமாவுக்கு ஏற்பட்ட சந்தேகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் சுந்தரி. எதிர்பாராத திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருப்பதால் ரிஆர்பியிலும் முன்னணியில் நிற்கின்றது.

கார்த்திக் சுந்தரிக்கு துரோகம் செய்து விட்டு அனுவைத் திருமணம் முடித்திருப்பது கார்த்திக்கின் பெற்றோருக்கு தெரிந்து விட்டது. இதனால் மன அழுத்தத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு கார்த்திக்கின் அப்பா இறந்து விட்டார். கார்த்திக்கின் அம்மா கார்த்திக் மீது கோவமாக உள்ளார். இது சுந்திரியின் மாமாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இப்படியான நிலையில் கார்த்திக் அப்பபாவுக்கு காரியம் செய்ய வேண்டும் என்பதற்காக அனுவிடம் வெளியூருக்கு போவதாக பொய் சொல்லி விட்டு சுந்தரி வீட்டிற்குச் சென்றுள்ளார். கார்த்திக் தன்னை ஏமாற்றிய விடயத்தை அனு கண்டு பிடித்து சுந்தரி வீட்டிற்கு வருகின்றார்.

இது ஒரு புறம் இருக்க கார்த்திக்கின் அப்பா முழுச் சொத்தையும் சுந்தரி பெயரில் எழுதி வைத்திருக்கிறார். இது குறித்த உயிலை வக்கீல் சுந்தரியின் மாமாவிடம் கொண்டு வந்து கொடுக்கின்றார்.இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது அனுவுக்கு உண்மை தெரிந்து விடுமா? என கடும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement