• May 05 2024

வெள்ளித்திரையில் சுந்தரி - பாரதி கண்ணம்மா நடிகைகளின் புதிய படம்.! எப்போ ரிலீஸ் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சுந்தரி சீரியல் மூலம் பிரபலமானவர் கேப்ரியலா. இதேபோல் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் வினுஷா.இந்த சீரியல்கள் மூலம்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றவர்கள்.இல்லத்தரசிகளின் விருப்பத்துக்குரிய நடிகைகளாக உள்ளனர். 

இருவருமே தங்களுடைய கருப்பு நிறத்தையே தங்களுடைய ப்ளஸ்ஸாக பார்க்கின்றனர். அதையே பிளஸ் ஆக மாற்றி குறிப்பிட்ட கதாபாத்திரங்களின் மூலம் தமிழ் சின்னத்திரை உலகில் வலம் வருகின்றனர்.  இந்த நிலையில் இவர்கள் தற்போது சேர்ந்து நடித்திருக்கும் N4 திரைப்படம் குறித்து பேசி இருக்கின்றனர்.

அனுபமா குமார், அக்‌ஷய் கமல், மைக்கேல் தங்கராஜ், அப்சல் ஹமீது, வினு ஷா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு N4 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. லோகேஷ் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் மார்ச் 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் சேனல் ஒன்றுக்கு இதுகுறித்த பிரத்யேக நேர்காணலில் இருவரும் கலந்துகொண்டனர். இதில் பேசிய சுந்தரி சீரியல் நாயகி கேப்ரியலா,  “நான் நேரடியாக சொல்கிறேன், இந்த சுந்தரி சீரியலில் நான் கருமை நிறமாக இருப்பதாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனால்தான் இந்த கேரக்டர் கிடைத்திருக்கிறது. இதையே நான் பிளஸ் ஆகப் பார்க்கிறேன். இதை குறையாக பார்த்தவர்களுக்கு முன்னால் இதையே நான் பிளஸ்ஸாக மாற்றி சாதித்து கொண்டிருக்கிறேன் என்பதையே மகிழ்ச்சியுடன் காட்டிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். வேறு எந்த திரைப்படங்களிலும் நான் நடிக்கவில்லை. இந்த N4 திரைப்படத்தில் தற்போது நடித்திருக்கிறேன். அதற்கு காரணம் எங்கள் மீது லோகேஷ் வைத்த நம்பிக்கைதான், அதற்கு நன்றி சொல்லி கடமைப்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதே போல் பாரதி கண்ணம்மா ஹீரோயின் வினுஷா பேசும் பொழுது, “நான் இந்த திரைப்படம் நடித்ததை பெரிய விஷயமாக பார்க்கிறேன். இதற்காக முதலில் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அதேபோல் இந்த திரைப்படத்தை எடுத்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை எப்படியேனும் ரிலீஸ் செய்வதில் லோகேஷ் மிகவும் தீவிரமாக இருந்தார். அவருடைய தொடர் மற்றும் விடாமுயற்சி தான் இந்த திரைப்படம் தற்போது வெளியாவதற்கான காரணமாக இருக்கிறது.

 நானும் சின்னத்திரையில் என்னை எத்தனையோ முறை பார்த்து விட்டேன், என்னை நான் பெரிய ஸ்கிரீனில் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்படுவதாக அவரிடம் கூறி இருந்தேன், அதன்படி படம் திரையரங்கில் ரிலீஸ் ஆவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement