தமிழ் சினிமாவில் 80களில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு. இவர் ரஜினி, கமல், பிரபு எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
மேலும் தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகிய அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இது தவிர தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்திலும் நடித்து வருகின்றார்.
அத்தோடு இவர் இயக்குநர் சுந்தர்.சியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவரடகளுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர் என்பதும் முக்கியமாகும். படங்களில் பிஸியாக இருந்தாலும் அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி நடிகை குஷ்புவின் பிறந்தநாள், பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.
குஷ்பு சுந்தர்.சி மிகவும் ரொமாண்டிக் நபர் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த பிறந்தநாளுக்கு சுந்தர்.சி சூப்பரான சர்ப்ரைஸ் தனது மனைவிக்கு கொடுத்துள்ளாராம். அதனை புகைப்படங்களுடன் நடிகை குஷ்புவே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!