• May 09 2024

KGF பட இயக்குநருக்கு தற்கொலை மிரட்டல்..இது தான் காரணமாம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியளவில் மிகப்பெரிய ஹிட்டித்த KGF படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பி இருந்தது. ஜூலை 16 ஆம் தேதி வெளியாக இருந்த KGF-2 படம் கொரோனா இரண்டாம் அலையால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் உலகம் முழுவதும் இந்தப்படம் திரையரங்குகளில் மிகப்பிரமாண்டாக வெளியானது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் KGF. இந்தியளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது. மேலும் நடிகர் யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட நடசத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் உலகம் முழுவதும் வெளியான KGF படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகின்றது. நாடு முழுவதிலும் ரசிகர்கள் இத்திரைப்படத்தை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல, வெளிநாடுகளிலும் இத்திரைப்படம் சக்கைப் போடு போட்டு வருகின்றது. இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது பிரபாஸ் நடிப்பில் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.

இவ்வாறுஇருக்கையில் பிரபாஸின் தீவிர ரசிகர் ஒருவர், சலார் படத்தின் அப்டேட்டை இயக்குநர் பிரசாந்த் நீல், தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஃபிலிம்ஸ் வெளியிடாவிட்டால் இம்மாதம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எனினும் தற்கொலை கடிதம் என தலைப்பிட்டு அந்த நபர் எழுதியுள்ள கடிதத்தில், ‘சாஹோ, ராதே ஷ்யாம் படங்களின் தோல்வியால் நாங்கள் ஏற்கனவே அதிருப்தியிலும், வேதனையிலும் இருக்கிறோம். சலார் படத்தின் டீசர் குறித்து மே மாதம் அறிவிப்பு வெளியாகும் என்றார்கள். ஆனால் இதுவரை எந்த அப்டேட்டும் இல்லை. இந்த மாதத்தில் சலார் படத்தின் அப்டேட் வராவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement