• May 09 2024

அஜித்தை பற்றி பல விடயங்களை கூறிய பயில்வான் ரங்கநாதன்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது யூடூப்பில் பரபரப்பான கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவருகின்றார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்று தான் கூற வேண்டும்.இதனைத் தொடர்ந்து நடிகர்கள் மற்றும் நடிகைகளைப்பற்றிய சர்ச்சையான கருத்துக்களை கூறி பல பிரச்சனைகளில் சிக்கி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் நடிகர் அஜித்தை பற்றி தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தன் கடின உழைப்பாலும், அதீத நம்பிக்கையாலும் இன்று உச்சநட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கின்றார் அஜித்

திரையுலகில் இவர் பார்க்காத வெற்றியும் இல்லை, சந்திக்காத தோல்வியும் இல்லை. இருப்பினும் எந்த நிலையிலும் இவரை ரசிகர்களை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. ரசிகர்கள் இவருக்காக செலவு செய்து பால் அபிஷேகம் போன்ற விஷயங்களை செய்வதை விரும்பாத அஜித் தன் ரசிகர் மன்றத்தையே களைத்தார்.

அத்தோடு கடந்தாண்டு அஜித் தன்னை தல என்று அழைக்கவேண்டாம் எனவும் அறிக்கை விட்டார். இந்நிலையில் தற்போது அஜித்தை பற்றி பேசிய பயில்வான் ரங்கநாதன், அஜித் பற்றி தவறாக பேசுபவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிவித்துள்ளார்.

அஜித் ஒருபோதும் தன் படத்தை வந்து பார்க்கவேண்டும் என்று ரசிகர்களுக்கு கட்டளை இட்டதில்லை. நல்ல படத்தை பாருங்கள் ஆதரியுங்கள், என் படமும் நன்றாக இருந்தால் பாருங்கள் என்றுதான் சொல்லியிருக்கின்றார்.

மேலும் ரசிகர்களை முதலில் உன் குடும்பத்தை பார் பின்னர் நேரம் இருந்தால் மட்டுமே என் படத்தை பார் என்று கூறியிருக்கின்றார். மேலும் அஜித் ஒருபோதும் தன் ரசிகர்களை உசுப்பேற்றியது இல்லை. தன் படங்களை தானே ப்ரோமோஷன் செய்ததும் இல்லை.

எனவே அஜித்தைப்பற்றி தவறாக பேசுபவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிவித்து இருக்கின்றார் பயில்வான் ரங்கநாதன். தற்போது அஜித்தை பற்றி இவர் பேசியிருக்கும் கருத்து இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/TgAuqTJfNt0


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement