• Apr 27 2024

குடும்பமே சேர்ந்து விவாகரத்து தரச் சொல்லி கொடுமைப்படுத்தினாங்க- செல்வராகவன் பற்றிய உண்மைகளை போட்டுடைத்த சோனியா அகர்வால்

stella / 8 months ago

Advertisement

Listen News!

சோனியா அகர்வால் தமிழ் சினிமா மற்றும் சில தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை ஆவார்.காதல் கொண்டேன் , 7G ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.

இவர் இயக்குநர் செல்வராகவனை  காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2006ம் ஆண்ட திருமணம் செய்து கொண்டார்கள்.


திருமணத்திற்கு பின்னர் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்திற்கு பிறகு இருவரும் அவரவர் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் நடிகை சோனியா அகர்வால் செல்வராகவனை விவாகரத்து செய்ததற்கான காரணம் என்பதைக் கூறியுள்ளார்.அதில் அவர், செல்வராகவன் குடும்பத்தினர் அனைவரும் தன்னை நடிக்க கூடாது என எதிர்த்ததாகவும், எனவே ஒரு வருடம் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.


அதன்பின் குஷ்பு மூலம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க ஒப்புக் கொண்டதால் மீண்டும் செல்வராகவன் குடும்பத்தினர் எதிர்த்துள்ளனர்.இதனால் விவாகரத்து செய்ய சொல்லி தன்னை செல்வராகவன் குடும்பத்தினர் டார்ச்சர் செய்ததாகவும் அதனால் தான் விவாரத்து செய்ததாகவும் ஓபனாகக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement