• Apr 30 2024

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சினேகா வெளியிட்ட புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாத் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா. மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் 'என்னவளே' படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமல்லாது தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்டு புன்னகை அரசி எனவும் பெயர் எடுத்தார்.


மேலும் 2009 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற திரைப்படத்தில் ஜோடியாக இணைந்து நடித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னாளில் அந்த நட்பு காதலாக மாறியது.


இதனைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அந்தவகையில் தற்போது இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.


இவ்வாறாக இவர்கள் இருவரும் சந்தோசமாக தமது குடும்பத்துடன் இருந்து வரும் நிலையில் நடிகை சினேகாவும் பிரசன்னாவும் விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இருவரும் விரைவில் பிரிந்து விடுவார்கள் என்றும் செய்திகள் சோஷியல் மீடியாவில் ஒரு கும்பல் கடந்த சில நாட்களாக வதந்தியை பரப்பி வருகிறது.


இந்நிலையில் அதற்கு எல்லாம் முடிவு கட்டும் விதமாக கணவனுடன் சேர்ந்து புதுவருட வாழ்த்து தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement