• Jan 30 2026

நடிகையின் மசாஜ் சென்டரால் சிக்கிய சிவகார்த்திகேயன்! புதிய சர்ச்சையை கிளப்பிய பயில்வான்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் சினிமா பிரபலங்கள், நடிகைகள், நடிகர்கள் அவர்களது வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளை வைத்து விமர்சிப்பதில் கைதேர்ந்தவராக காணப்படுபவர் தான் பயில்வான் ரங்கநாதன்.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்பில் சர்ச்சையான விவகாரம் ஒன்றை பற்றி பேசியுள்ளார். அது வைரலாகியுள்ளது.

அதாவது, கடந்த சில மாதங்களாகவே பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகளை சந்திக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.


ஆரம்பத்தில் கடனில் சிக்கித் தவித்த சிவகார்த்திகேயன், அதிலிருந்து மீளும் போது இமான் விவகாரத்தில் பெரிய அளவில் சிக்கிக்கொண்டார்.

அதை தொடர்ந்து அயலான் படம் ரிலீஸ் ஆகும் முன்பே பல பிரச்சனைகள் நடந்தது. எனினும், படம் ஒரு மாதிரி ரிலீஸ் ஆன போதும் அது எதிர்பார்த்த அளவில் வசூல் பெறவில்லை.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனை மசாஜ் சென்டரில் தொடர்புபடுத்தி புதிய சர்ச்சை  ஒன்றைக் கிளப்பி உள்ள விமர்சகர்  பயில்வான் ரங்கநாதன்.


சோனா என்ற நடிகை மசாஜ் சென்டர் ஒன்றை ஆரம்பித்தபோது அதை சிவகார்த்திகேயன் தான் திறந்து வைத்தார். ஆனால் அங்கு வேற மாதிரியான தவறான தொழில் நடந்து வருவதாக தனது யூடிபில் பேசியிருந்தார்.

எனினும், குறித்த நடிகை சோனா தன்னையும் தன்னுடைய மசாஜ் சென்டர் பற்றியும் அவதூறு பரப்புவதாக பயில்வான் மீது புகார் கொடுத்திருந்தார்.

ஆனால் அந்த நடிகையின் பின்னால் பிரபலத்தின் தூண்டுதல் உள்ளதாகவும், இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று வீர வசனமும் பேசியுள்ளார் பயில்வான்.

இவ்வாறு இறுதியில் இந்த பிரச்சனையில் சிவகார்த்திகேயனின் பேரையும் சேர்த்து டேமேஜ் செய்துள்ளார் பயில்வான்.

Advertisement

Advertisement