• Sep 17 2024

மகா வீட்டில் காளி அவதாரம் எடுக்கும் சீதா..! யாரை காவு வாங்க தெரியுமா? வெளியான ப்ரோமோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தாெலைக்காட்சியில்  ஔிபரப்பாகி வரும் சீரியல் தான் சீதா ராமன். இத் தொடர் சமூகத்தில் நடக்கும் உண்மையான  விடயங்களை, காதல் கதையுடன் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை மையப்படுத்தி ஔிபரப்பாவதனால் ரசிகர் கூட்டம் அதிகமாகவே இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய  நாளுக்கான ப்ரோமோ  வெளிவந்திருக்கின்றது. அதில் சீதா காளியின் அவதாரத்தை எடுக்கிறார். அதில் என்ன நடக்க போகின்றது என்பதனை பார்க்கலாம்.


அதன்படி, ப்ரன்டின் பிறந்தநாள் பாட்டிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற அணு, பிரியா, சத்தியா மூவரும் மீண்டும் நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு வருகின்றனர். இதை பார்த்த சீதா ராம் கோவமாக அவர்களை பார்க்கின்றனர்.இதுதான் இறுதியாக நடைபெற்றது.

இதன்பின் வெளியான ப்ரோமோவில், சீதாவை சூழ்ச்சி வலையில் சிக்க வைக்கும் நோக்கில் மூன்று சில்வண்டுகளும் சேர்ந்து தாம் குடிக்கவில்லை. சீதா வேணும் என்றே பழி போடுவதாக கூறுகிறார்கள்.

இதையடுத்து, அவர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு மகா வலியுறுத்த வேறு வழியின்றி மன்னிப்பு கேட்கிறார் சீதா. அதன்பின் அவர்களிடம் இருந்து உண்மையை பெறுவதற்காக காளியின் அவதாரம் எடுக்கின்றார் சீதா.


அதன்படி, காளி அவதாரம் எடுக்கும் சீதா, மூன்று பேரையும் சாமி வந்தது போல மிரட்டி உண்மையை அவர்கள் வாயில் இருந்து எடுத்து அவர்களுக்கு தண்டனை கொடுக்க முயலுகிறார். இதுவே குறித்த ப்ரோமோவில் காட்டப்படுகிறது. பொறுத்திருந்து சீதாவின் காளி அவதாரத்தை பார்ப்போம்.




Advertisement

Advertisement