சிம்புவின் நடிப்பில் இறுதியாக 'பத்துதல' திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனையடுத்து அவரின் 48-வது படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க்கின்றது.
மேலும் இப்படம் ரூபாய் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் சிம்புவின் திருமணப் பேச்சுக்கள் மீண்டும் தலை தூக்கத் தொடங்கிவிட்டன.
அதாவது சிம்பு இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஏற்கெனவே ஒரு செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் அது பின்னர் வதந்தி எனத் தெரிய வந்தது. இந்நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது.
அதாவது சிம்பு ஆந்திராவை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரும், சினிமா ஃபைனான்ஸியருமான ஒருவரின் மகளை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இதுதொடர்பாக சிம்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனால் இது எந்தளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Listen News!