• May 06 2024

தட்டிக் கொடுக்கிறதற்குத் தான் ஆட்களே இல்லை... சக்சஸ் மீட்டில் மனம் திறந்து பேசிய சிம்பு...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் ஒரு வாரிசு நடிகராக அறிமுகமாகி பல சர்ச்சைகளையும் கடந்து இன்று தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. இவர் ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்பிருந்தே குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும் கலக்கி இருக்கின்றார்.


அந்தவகையில் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படமானது திரையரங்குகளில் வெளியாகிய நாளிலிருந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

அத்தோடு வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகி உள்ள இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் பிரமாண்ட நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டு இருக்கிறது.


இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் படக்குழுவினர். இந்நிலையில் நேற்றைய தினம் வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் இடம்பெற்றது.

இதில் முக்கிய பிரபலங்களான சிம்பு, இயக்குநர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உட்படப் பலரும் கலந்துகொண்டு இப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.


அதனைத் தொடர்ந்து பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மீடியாவுக்கு மனமார நன்றி தெரிவித்து பேசினர்.

அந்தவகையில் படத்தினுடைய ஹீரோவான சிம்பு பேசுகையில், “ரிலீசுக்கு முன் இந்தப் படத்தை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என எனக்குப் பயமாக இருந்தது. ஆனால் ரிலீசுக்கு பின் படத்துக்கு கிடைக்கும் அமோக வரவேற்பை பார்க்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு" எனக் கூறியுள்ளார். 


மேலும் "இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்த பிரஸ் மற்றும் மீடியாவிற்கு கோடான கோடி நன்றிகள். நான் நடிச்சதுலயே பிரச்சனையே இல்லாமல் ரிலீஸ் ஆன படம் என்றால் அது இதுதான்.

தியேட்டருக்கெல்லாம் கேடிஎம் ஒரு நாளைக்கு முன்னாடியே அனுப்பிட்டாங்க. அதெல்லாம் பார்க்கும் போது எனக்கு இது கனவா இல்லை நிஜமானு கேட்க தோணுச்சு" எனவும் உணர்ச்சி பூர்வமாக பேசியிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது "இந்த படம் இன்று இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆனதற்கு முக்கியமான காரணம் விமர்சனங்கள் தான். 80 சதவீதம் சிறந்த விமர்சனங்களே வந்துள்ளன. சினிமாவில் தட்டிவிடுறதுக்கு நிறைய பேர் இருக்காங்க, ஆனால் தட்டி கொடுக்குறதுக்கு தான் இன்னைக்கு ஆட்களே இல்லை" எனவும் கூறியிருந்தார். 

அத்தோடு "இரண்டாம் பாகத்துல என்னவெல்லாம் வச்சிருக்காங்கனு தெரியல. அதையாச்சும் கொஞ்சம் ஜனரஞ்சகமா, ரசிகர்கள் கத்தி என்ஜாய் பண்ற மாதிரி விஷயங்கள்லாம் வைச்சீங்கனா நல்லா இருக்கும்” எனவும் அந்த சக்சஸ் மீட்டின் போது படக்குழுவினரிடம் கேட்டுக்கொண்டார் நடிகர் சிம்பு.

Advertisement

Advertisement

Advertisement