• May 06 2024

திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம்... இப்படி ஒரு மோசமான பிரச்சினை தான்... உண்மையை உளறிய சிம்பு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானவர் சிம்பு. அதாவது டி.ராஜேந்தரின் மகனான சிம்பு நடிகராக மட்டுமல்லாது தனது தந்தையை போல இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட ஒரு கலைஞனாக திகழ்ந்து வருகின்றார்.


சிறுவயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும் நடித்து வரும் சிம்புவிற்கு தற்போது வயது 39 ஆகிறது. இருப்பினும் துரதிஷ்டவசமாக அவர் இதுவரை திருமண வாழ்க்கையில் இணைந்து கொள்ளவில்லை.

இருப்பினும் அடிக்கடி காதல் சர்ச்சைகளில் சிக்கி வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றார். அதாவது நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, நிதி அகர்வால் என பல்வேறு நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கி இருந்தார்.


இவர்களில் நயன்தாரா, ஹன்சிகா ஆகியோரை சிம்பு உருகி உருகி உண்மையாகக் காதலித்தது அனைவரும் அறிந்த ஒரு விடயமே. ஆனாலும் அந்த இரண்டு காதலுமே தோல்வியில் தான் முடியவடைந்தது.

எனினும் இது தொடர்பில் சற்றும் மனம் தளராத சிம்பு உடல் எடை அதிகரித்ததன் காரணமாக ஒரு சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் விலகி இருந்து வந்தார். எனினும் தற்போது ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறிய பின் படங்களில் மீண்டும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.


இந்நிலையில் தற்போது இவரின் நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்கள் பிரமாண்டமாக தயாராகி வருகின்றன. இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங் யாவும் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில் இப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

அந்தவகையில் இப்படம் ஆனது வருகிற செப்டம்பர் 15-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படத்தின் புரமோஷனுக்காக கதாநாயகன் சிம்பு பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். 


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் "திருமணத்தை தள்ளிப்போடுவதற்கான காரணம் என்ன" என சிம்புவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சிம்பு, "சமீபகாலமாக எனது திருமணம் பற்றி நிறைய கேள்விகள் வருகின்றன.

நான் அவரை காதலிக்கிறேன், இவரை திருமணம் செஞ்சுகிட்டேன் என்றெல்லாம் கூட வதந்திகள் பரப்புகிறார்கள். மேலும் நான் 19 வயசுல இருந்தே இந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன்" எனக் கூறியிருக்கின்றார்.

தொடர்ந்து பேசுகையில் "மகனை திருமணகோலத்தில் பார்க்கனும்னு எல்லா பெற்றோருக்கும் ஆசை இருக்கும், அதேபோல் தான் எனது தாய், தந்தையும் விரும்புகிறார்கள். ஆனால் எனக்குத்தான் திருமணம் செய்துகொள்ள சற்று பயமாக இருக்கின்றது. 

ஏனெனில் அவசர அவசரமாக கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கப்புறம் கருத்து வேறுபாடு, சண்டை, விவாகரத்து என்று பிரச்னைகள் வந்துவிடக்கூடாது, இந்தப் பயத்தால்தான் நான் திருமணத்தை சற்றுத் தள்ளிப்போடுகிறேன்" எனவும் தெரிவித்திருந்தார் சிம்பு. 

அதுமட்டுமல்லாது "எனக்கான சரியான துணை வரும் வரை காத்திருக்கலாம் என்று நான் முடிவு பண்ணிருக்கேன்” எனவும் பதிலளித்திருக்கின்றார் நம்ம சிம்பு. இதையறிந்த சிம்பு ரசிகர்கள் "விவாகரத்துப் பயம் நம்ம தலைவனையும் விட்டு வைக்கலையே" எனக் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement