• May 04 2024

வேற மாதிரி அவதாரம் எடுத்து வரும் சிம்பு ...தனக்கான அவப்பெயரை துடைத்தெறிவாரா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஆரம்பத்தில் சிம்புவின் மீது நிறைய அவப் பெயர்கள் இருந்து வந்தது. அதையெல்லாம் இப்போது தகர்த்து எறிந்து விட்டு ஒட்டுமொத்தமாக உருமாறி வேற மாதிரி அவதாரம் எடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம் . 

இந்த சூழலில் மாநாடு படத்தில் இருந்து சிம்புவின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் இருந்து வருகிறது. மேலும் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என வெற்றி படங்களை தொடர்ந்து சிம்பு கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட ரசிகர்களுக்கு அமோக பிரியாணி விருந்தெல்லாம் கொடுத்திருந்தார்.இவ்வாறு சிம்புக்கு உச்சகட்ட நல்ல நேரம் சுற்றி வருகிறது. ஆனால் தற்போது வரை சிம்புக்கு ஒரு அவப்பெயர் மட்டும் இன்றுவரை கரும்புள்ளியாக இருந்து வருகிறது. அதாவது சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புக்கும் பிரச்சனை இருந்து வந்தது.

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்த நிலையில் வெறும் 27 நாட்கள் மட்டுமே வேலை செய்தார் என்று தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது. மேலும் எப்படியோ படத்தை எடுத்து ரிலீஸ் செய்த நிலையில் அதுவும் நஷ்டத்தை சந்தித்தது.

இதன் மூலம் தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட 15 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்தப் படத்தின் நஷ்டக் கணக்குகளை சிம்பு தீர்த்து விட்டார் என்றால் அவருக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை. இப்படியும் தயாரிப்பாளரிடம் பேசி தீர்வு கிடைத்து விட்டது என்றால் பழைய ராஜ கம்பீர நடையுடன் சிம்புவை பார்க்கலாம்.

மேலும் சிம்புவுக்கு இப்போது சம்பளமும் உயர்ந்து உள்ளதால் ஓரளவு அந்த கடனை அவரால் தீர்க்க முடியும். மேலும் தன்னால் தான் தயாரிப்பாளர் இந்த நிலைமைக்கு வந்தார் என்று யோசித்தால் என பலரும் கூறி வருகிறார்கள். அதனால் தன் மீது உள்ள அவப்பெயரை சிம்பு துடைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement