• May 04 2024

ஷாருக்கான்-விஜய் நடிப்பில் உருவாகவுள்ள பிரமாண்ட திரைப்படம்.. அடேங்கப்பா.. அதுவும் இத்தனை கோடி பட்ஜெட்டிலா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநராகத் திகழ்ந்து வருபவர் ஷங்கர். இவர் 'ஜென்டில்மேன்' திரைப்படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து 'காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.O' என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தற்போது பிரம்மாண்ட இயக்குநராக வலம் வருகிறார். 


மேலும் இவர் இயக்குநராக மட்டும் இல்லாமல் எஸ் பிக்சர்ஸ் பேனரில் பல படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது ரசிகர்களுக்காக ஷங்கர் குறித்த குட் நியூஸ் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது விஜய் - ஷாருக்கான் இருவரையும் வைத்து ஒரு படம் இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


அந்தவகையில் ஆரம்பத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரிடம் தான் உதவியாளராக வேலை பார்த்தார் ஷங்கர். ஆனால் விஜய்யும் ஷங்கரும் 'நண்பன்' படத்தில் மட்டுமே இதுவரை இணைந்தனர். அந்தப் படமும் இந்தியில் ஹிட் அடித்த 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்காக தான் தமிழில் உருவானது. 

இதனால் விஜய்யுடன் இணைந்து மீண்டும் ஒரு வெற்றிக் கூட்டணிக்கு ஷங்கர் முடிவெடுத்துள்ளாராம். இதில் இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் ஷாருக்கானும் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அத்தோடு விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் 'லியோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். 


இதேபோன்று தான் ஷாருக்கானும் அட்லீ இயக்கத்தில் 'ஜவான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய் - ஷாருக்கான் இருவருமே நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். இதனால் ஷங்கர் இயக்க நினைத்துள்ள படமும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்பதால், அதில் விஜய் - ஷாருக்கானை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. 


அதுமட்டுமல்லாது சயின்ஸ் பிக்சன் ஜானரில் 900 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் முழுக்க முழுக்க தண்ணீருக்கு அடியில் பிரமாண்டமான முறையில் படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஏனெனிலில் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் இரண்டாம் பாகம் தண்ணீருக்கு அடியில் படமாக்கப்பட்டிருக்கும். அதேபோல் பிரம்மாண்டமாக இந்தப் படத்தையும் இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். 

இதனைத் தொடர்ந்து இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement