• May 01 2024

தந்தையின் படத்திலேயே நடிகராக அறிமுகமாகும் செந்திலின் மகன்- படப்பிடிப்பிலிருந்து லீக்கான போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90 களின் கால கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக விளங்கியவர் நடிகர் செந்தில் . இவர் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த காட்சிகள் தற்போதைய ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருவதைக் காணலாம்.

மேலும் ஒரு கால கட்டத்தில் இவர்கள் காம்போ இல்லாமல் படங்கள் வெளியாகவில்லை என்றும் கூறலாம். இதில் செந்தில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்கள். இப்போது மீண்டும் சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேந்த கூட்டம் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் டப்பிங் பேசி முடித்திருந்தார் செந்தில்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர நடிகர் செந்தில் தற்போது பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் செந்திலின் மகன் வேடத்தில் அவரின் மகன் மணி பிரபுவே நடித்துள்ளார். இது சம்மந்தமான படப்பிடிப்பு தளப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் செந்திலுக்கு இரண்டு மகன்கள்.

அதில் மூத்தவரான மணிகண்டபிரபு ஒரு மருத்துவர் ஆவார். இந்நிலையில் இப்போது தன் தந்தையின் படத்திலேயே அவர் நடிகராக அறிமுகமாகிறார். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பானது அதிகரித்துக் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement