• May 03 2024

பார்வதியை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டிய செல்வம் ‌‌- கடைசியில் காத்திருந்த ருவிஸ்ட்-மெகா சங்கமம் எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல்கள் தான் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி-2 .இந்த இரண்டு சீரியல்களும் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

சந்தியா சாமியார் செய்த ஒவ்வொரு குற்றத்தையும் கண்டுபிடித்து அதை அனைத்தையும் ஆதாரத்தோடு நிரூபிக்க ஊர் மக்கள் அனைவரும் ஷாக்கடைகின்றனர்.அத்தோடு சிலையின் கண்ணீர் சிவப்பு நிறங்களுக்கு தடவி தான் கண்ணீர் வர வைக்கப்பட்டது என்பதை நிரூபிக்கிறார்.

இதனையடுத்து போலீஸ் சாமியாரை பிடிக்க சிவகாமி ஓடிச் சென்று சந்தியாவை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கிறார். அதன் பின்னர் செல்வம் பார்வதியை துப்பாக்கி முனையில் வைத்து சாமியாரை விடுதலை செய்யுமாறு மிரட்டுகிறார். மேலும் இப்படியான நிலையில் அர்ச்சனா சாதுரியமாக செயல்பட்டு செல்வத்தின் தலையில் கட்டையால் தாக்கி பார்வதியை மீட்கிறார். பின்னர் போலீஸ் இருவரையும் கைது செய்ய ஊர் மக்கள் அனைவரும் அர்ச்சனாவை பாராட்டுகின்றனர்.

இதன் பிறகு எல்லோரும் வீட்டுக்கு சென்ற பிறகு எல்லா பிரச்சனையும் ஒரேடியாக முடிந்து விட்டது என மயிலை வைத்து அனைவருக்கும் சுத்தி போடுகின்றனர். அதன் பின்னர் சிவகாமி எல்லாரும் முன்னாடியும் சந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

சந்தியா செய்த ஒவ்வொரு விஷயத்தையும் சுட்டி காட்டி என்னை மன்னித்துவிடு நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் என கெஞ்சுகிறார். இதன் பிறகு சிவகாமியை சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றனர். அவசரப்பட்டு ஏற்றி வைத்திருந்த மூன்று விளக்கு ஒரு விளக்கை அணைத்து விட்டேன் என சிவகாமி நினைத்து அப்படியே நெஞ்சில் கை வைத்து மயங்கி விழுகிறார்.

இதன் பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ய அவருக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக் என தெரிய வருகிறது. அவருக்கு வருங்காலத்தில் பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு சிறிய ஆபரேஷன் செய்ய வேண்டும் அதற்காக அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென பாரதி கூற அதற்கான ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன் என செய்கிறார்.

மேலும் இந்த பக்கம் வெண்பா செய்தியில் கண்ணம்மா சாதனை குறித்து கேட்டு கடுப்பாக அவரை மேலும் வெறுப்பேத்துகிறார் ரோகித். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement