• Apr 28 2024

அபார்ஷன் நடந்தபோது கையெழுத்துப் போட்டது யார்..? சூடுபிடிக்கும் சீமான்-விஜயலட்சுமி விவகாரம்.. போலீசார் எடுத்த திடீர் முடிவு..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டாயத்தின் பேரில் ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாக அளித்த புகாரின்பேரில் நடிகை விஜயலட்சுமிக்கு நேற்றைய தினம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 


அந்தவகையில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011-ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி  வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . இந்த புகாரின் பேரில் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்யவில்லை. 


தற்போது பாலியல் வழக்கில் அவரை கைதுசெய்யக்கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்றப்பட்டுள்ளது .இதனிடையே சீமான் கட்டாயத்தின் பேரில் 7 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்ததன்  அடிப்படையில் கீழ்பாக்கம் அரச மருத்துவமனையில் சுமார் 2 மணிநேரம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 


இந்நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது அடுத்த கட்ட நடவடிக்கையாக நடிகை விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர்கள் யார் என கண்டறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தவும், கருக்கலைப்பின் போது யாருடைய கையெழுத்து உள்ளது என்பது குறித்தும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement