இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைத்து, லைகா புரொடக்ஷனும் தயாரித்திருந்தது.
இப்படத்தில் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தார்.இந்த வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூட நடிக்க விருப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த வேடத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது என ஏற்கனவே,தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சரத்குமார் தனது மகள் வரலக்ஷ்மியுடன் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்குச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சரத்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க மகள் வரலக்ஷ்மியுடன் சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் நடிகை வரலக்ஷ்மி தன்னுடைய தந்தையை 'பொன்னியின் செல்வன்' படத்தில் பார்க்கும் போது ஒரு ராஜாவை போலவே தான் உணர்ந்ததாகவும் கூறியுயள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!