• May 04 2024

வரலக்ஷ்மி திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய சரத்குமார்...என்ன கூறினார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்  திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இவர் கடந்த 1984ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு வரலக்ஷ்மி மற்றும் பூஜா என இரு மகள்கள் பிறந்தார்கள். 16 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின்னர் மனைவி சாயாவை கடந்த 2000ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.


இதன்பின் தான் நடிகை ராதிகாவை 2001ஆம் ஆண்டு இரண்டாவதாக  திருமணம் செய்துகொண்டார்.


இவ்வாறுஇருக்கையில், தனது மகள் நடிகை வரலக்ஷ்மியின் திருமணம் குறித்து நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.


'அது வரலட்சுமியின் விருப்பம் தான். நான் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. வரலட்சுமி தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துவிட்டேன் என்று என்னிடம் கூறும் பொழுது அவருக்கு நான் திருமணம் செய்து வைப்பேன்' என்று சரத்குமார் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement