• May 04 2024

’வாடி வாடி நாட்டுக்கட்டை’.. நடுரோட்டில் மனைவியுடன் குத்தாட்டம் போட்ட பாக்யராஜ் மகன்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்யராஜ் தனது மனைவியுடன் நடுரோட்டில் ’வாடி வாடி நாட்டுக்கட்ட’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநரான பாக்யராஜ் மகன் தான் சாந்தனு பாக்யராஜ் என்பதும் இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடித்து வந்தாலும் அவருக்கு குறிப்பிட்டு சொல்லும் படி எந்த விதமான வெற்றிப்படமும் வரவில்லை என்பது துரதிஷ்டமானதாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு ’ராவண கூட்டம்’ மற்றும் இந்த ஆண்டு ’ப்ளூ ஸ்டார்’ ஆகிய படங்கள் சாந்தனு நடிப்பில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றாலும், இந்த படங்கள் வசூல் அளவில் பெரிய வெற்றியை பெறவில்லை என்பதும் தற்போது அவர் எந்த படமும் இல்லாமல் உள்ளார் என்பது தான் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்யராஜ் தொலைக்காட்சி தொகுப்பாளினி கிகி விஜய் என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவரும் தற்போது தாய்லாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் அங்கு நடு ரோட்டில் மக்கள் கூட்டம் அதிகமான பகுதியில் ’வாடி வாடி நாட்டுக்கட்டை’ என்ற பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

மேலும் இந்த வீடியோவின் கேப்ஷனாக ‘எங்க விட்டாலும் ஆடுவோம்’ என்று பதிவு செய்திருப்பதை எடுத்து ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement