• May 07 2024

சைக்கிளில் சென்ற விஜய்... அதற்கான காரணம் என்ன..? ரகசியத்தை போட்டுடைத்த சஞ்சீவ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பின் மூலம் ஆரம்பமான இவரது திரைப்பயணம் இன்று 65 படங்களைத் தாண்டியும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இவரின் நடிப்பிற்கும், நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் உண்டு.


இந்நிலையில் சமீப காலமாக இவரது அரசியல் பயணம் குறித்த பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் அடிபட்ட வண்ணமே இருக்கின்றது. அதாவது ஏற்கனவே 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் உள்ளூராட்சித் தேர்தல், நகராட்சி தேர்தல் என அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டு அத்தேர்தல்களில் வெற்றியும் கண்டுள்ளனர். 

அதுமட்டுமல்லாது விஜய் மக்கள் இயக்கத்திற்கு என சமூக வலைதள பக்கமும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதுடன் எந்த பதிவாக இருந்தாலும் அது விஜய்யின் அறிவுறுத்தலின்படி எனக் குறிப்பிடப்பட்டும் இருந்தது.

அத்தோடு சிறிது காலத்திற்கு முன்னதாக இவரின் பெயரில் கட்சி தொடங்க டெல்லி வரை சென்றிருந்தார் இவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர். எனினும் விஜய் கட்சி தொடங்கக் கூடாதென கண்டிப்பாக கூறியதால் அந்த முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விஜய் என்ன செய்தாலும் அதில் அரசியல் உள்நோக்கத்திற்கான காரணம் இருக்குமா என்ற கண்ணோட்டம் மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. அதன்படி 2021-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது விஜய் சிகப்பு மற்றும் கறுப்பு வண்ணம் கலந்த சைக்கிள் ஒன்றிலே வாக்களிக்க வந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தளபதி திமுகவிற்கு சார்பாக இருக்கலாம் என்ற ஒரு பேச்சு சமூக வலைத்தளங்களில் அடிபட்டது. எனினும் அந்த சம்பவம் தொடர்பாக விஜய் தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அவரது நெருங்கிய நண்பரான சஞ்சீவ் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் விஜய் ஏன் அந்த வண்ண சைக்கிளை பயன்படுத்தினார் என்பது குறித்த ரகசியத்தை வெளிபடையாக கூறியுள்ளார். அதாவது விஜய்யின் நெருங்கிய நண்பர்களான சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் இருவரும் சினிமா துறையில் பிரபலமானவர்களாக இருந்து வருகின்றார்கள்.


இதனால் அவ்வப்போது விஜய் இவர்களை சந்திக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆவது வழக்கம். அந்தவகையில் தற்போது விஜய் குறித்து சஞ்சீவ் பேசி இருந்த அந்தப் பேட்டி ட்ரெண்டாகி வருகிறது.

அதில் அவர் கூறுகையில் " விஜய் சைக்கிளில் வந்த அந்த செய்தியை பார்த்துவிட்டு தனக்கு சிரிப்பு வந்ததாகவும், பிறகு விஜய் இடமே போன் செய்து  இது குறித்து கேட்டதாகவும்" கூறியிருக்கின்றார்.

மேலும் இதற்கு விஜய் "வீட்டிற்கு பின்னால் தான் வாக்கு போட வேண்டிய இடம் இருக்கிறது நான் காரை எடுத்துக் கொண்டு சென்றால் எனது பின்னால் ஊடகங்களும், ரசிகர்களும் வண்டிகளின் பின்தொடர்ந்து போலிங் பூத் அருகே பார்க் செய்து அந்த இடத்தில் ஸ்தம்பிக்க  செய்து விடுவார்கள். அதனால் தான் நான் சைக்கிள் எடுத்துக் கொண்டு சென்றேன் வேறு எந்தக் காரணமும் இல்லை" எனக் கூறியதாக சஞ்சீவ் அப்பேட்டியில் தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement