• May 05 2024

சூட்டிங் ஸ்பாட்டில் சம்யுக்தா ரொம்ப சைலண்டாக மாறிட்டாங்க- முத்தழகு சீரியல் அமுதன் சொன்ன தகவல்

stella / 10 months ago

Advertisement

Listen News!

சிற்பிக்குள் முத்து என்னும் சீரியல் மூலம் காதல் ஜோடியாக அறிமுகமாகியவர்கள் தான் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த்.7 மாதங்களாககாதலித்து வந்த இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் செய்த வெறும் 15 நாட்களிலேயே இவர்கள் இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

 இவர்களின் இந்த பிரிவுக்கு சம்யுக்தாவின் அப்பா தான் காரணம் என்று விஷ்ணுகாந்த் குற்றம் சாட்டியிருந்தார்.தொடர்ந்து இருவரும் லைவில் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டனர். விஷ்ணுகாந்த் ஒரு காமக் கொடூரன் என்று சம்யுக்தாவும் பலருடன் சம்யுக்தாவிற்கு தொடர்பு உள்ளதாக விஷ்ணுகாந்தும் புகார் தெரிவித்த நிலையில், இவர்களின் இந்த விவகாரத்தை பலரும் விமர்சித்தனர். 


இந்நிலையில் தற்போது சம்யுக்தா முத்தழகு என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடர் இன்னும் சில தினங்களில் 500 எபிசோட்களை தொட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடர் குறித்தும் தன்னுடன் லீட் கேரக்டரில் நடித்துவரும் சம்யுக்தா குறித்தும் நடிகர் மகேஷ் மனம் திறந்து தன்னுடைய பேட்டியொன்றில் பேசியுள்ளார். தற்போது சம்யுக்தா சூட்டிங்கில் மிகவும் சைலண்டாக மாறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த சீரியலில் அமுதன் என்ற கேரக்டரில் மகேஷ் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாகத்தான் சம்யுக்தா நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் சீரியலில் மிகச்சிறப்பான நடிப்பை கொடுத்து வருவதாக மகேஷ் தெரிவித்துள்ளார். சம்யுக்தாவிற்கு பிரச்சினைகள் அதிகமாக இருந்தாலும் அதை திரையில் வெளிப்படுத்த மாட்டார் என்றும் இதற்கு அதிகமான மன தைரியம் வேண்டும் என்றும் மகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். 


தன்னுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் சம்யுக்தா சோர்வாக இருந்து தான் பார்த்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் அமைதியாக சம்யுக்தா வேலை செய்து வருவதாகவும் மகேஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய பிரச்சினை குறித்து வெளிப்படையாக இன்ஸ்டாகிராம் லைவில் பேசிவந்த சம்யுக்தா, தற்போது அதை நிறுத்தியுள்ளார். இனிமேல் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி தரப் போவதில்லை என்று சமீபத்தில் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement