• May 05 2024

மணிரத்னத்தின் முக்கிய திரைப்படத்தில் நடிக்க மறுத்த சமந்தா- அதுவும் இந்த பட வாய்ப்பை வேண்டாம் என்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா கடந்த 13 ஆண்டுகளை கடந்த சர்வதேச ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக இருந்து வருகிறார். இவரது பல வெற்றிப் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.திருமணம், விவாகரத்து முடிவு, மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு என அடுத்தடுத்த பிரச்சினைகளில் சிக்கினாலும் ரசிகர்களின் அன்பை மட்டும் சமந்தா இழந்துவிட வில்லை.

இவரது யசோதா படம் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், வரும் 14ம் தேதி சகுந்தலம் படம் வெளியாகவுள்ளது. இப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களுக்காக கேரளா, மும்பை என பறந்து பறந்து ஈடுபட்டு வருகிறார் சமந்தா. 


இந்நிலையில் நேற்றைய தினம் ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டர் மூலம் பதிலளித்தார். இதன்போது பல கேள்விகளை கேட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். சமந்தாவும்தான். அவருடைய படங்கள், லுக் உள்ளிட்டவை குறித்து பல கேள்விகளுக்கு சமந்தா பொறுமையாக பதிலளித்தார். இதனிடையே முன்னதாக மணிரத்னம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை சமந்தா நிராகரித்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் தொடர்ந்து விருப்பம் தெரிவித்துவரும் நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற கடல் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பைத்தான் சமந்தா


கௌதம் கார்த்திக், துளசி, அர்ஜுன், அரவிந்த்சாமி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து, கடந்த 2013ம் ஆண்டில் வெளியானது கடல். இந்தப் படத்தில் புதுமுகங்களை லீட் கேரக்டர்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார் மணிரத்னம். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement