• Apr 27 2024

விஜய்யை வைத்து மாமா வேலை பார்க்கிறேன்னு சொன்னாங்க.. மனம் திறந்து பேசிய எஸ்.ஏ.சி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக பல ஆண்டுகளாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா தம்பதியின் ஒரே மகன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய், இன்று உச்சநடிகராக உயர்ந்தமைக்கு காரணம் அவரது தந்தை தான். அந்த அளவிற்கு ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் விஜய்யை வைத்து 7 படங்களை எடுத்து தூக்கி விட்டார்.


ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விஜய்க்கும் அவரது அப்பாவான இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகருக்குமான உறவு சுமூகமாக இல்லை. அதாவது தனது பெற்றோரை பிரிந்து தனது மனைவி, மகன், மகள் என தனிக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றார் விஜய். 

இதனைத் தொடர்ந்து பல கஷ்டங்களில் இருந்தும் கூட விஜய்க்கு பக்க பலமாக இருந்த எஸ் ஏ சி-க்கும், விஜய்க்கும் இடையில் சண்டை,பிரச்சனை விஜய் அதனை கண்டு கொள்ளவில்லை எனப் பல விமர்சனங்கள் எழுந்து வந்தது. இது குறித்து சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் எஸ்.ஏ.சி. 


அதாவது "எங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான். ஆனால் விஜய்யை நான் எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை" என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது மேலும் அப்பேட்டியில் விஜய் குறித்த பல விசயங்களை ஓப்பனாக பேசியுள்ளார்.

அந்தவகையில் விஜய் நடித்த படத்தில் எந்த படம் கவர்ந்தது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு எஸ்.ஏ.சி "எனக்கு எப்பவும் ரசிகன் தான். ஃபுல் எண்டர்ரெண்ட் படமாக விஜய்யின் வாழ்க்கையை மாற்றியது அப்படம் தான்" எனக் கூறியுள்ளார்.


மேலும் "அப்படத்தினால் என்னைப் பலர் திட்டியும் விமர்சித்தும் இருந்தனர். படத்தில் விஜய் பல கிளாமர் காட்சியில் நடிகையுடன் நடித்திருப்பார். அதனால் என்னை, அப்பனே மகனுக்கு மாமா வேலை பார்க்கிறான் என்று வாய்க்கு வந்தபடி திட்டினார்கள்" எனவும் எஸ்.ஏ.சி கூறியுள்ளார். அத்தோடு "அதன்பின் பூவே உனக்காக படம் தான் ஹீரோவாக இருந்த விஜய்யை நடிகனாக்கியது" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement