நடிகர் சிவகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சூர்யா. இவர் வாரிசு நடிகர் என்பதால், படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிகவும் எளிதாக கிடைத்து விட்டாலும்... ஆரம்ப காலத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானது இவரது நடிப்பு. இப்படி பல விமர்சனங்களை கடந்து, தன்னுடைய திறமையால் தான், தேசிய விருது பெரும் அளவிற்கு வளர்ந்துள்ளார் சூர்யா.
அந்த வகையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை அள்ளிக் குவித்தது.இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வணங்கான் என்னும் திரைப்படம் உருவாகி வந்தது. ஆனால் இயக்குநர் பாலா தனது சொந்த பிரச்சினை காரணமாக படப்பிடிப்பினை நிறுத்தி வைத்துள்ளார்.
இதனை அடுத்து தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இது தவிர இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்னும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இவ்வாறு பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டுடிருக்கும் இவர் அண்மையில் கேஜிஎப் நடிகர் யாஷைச் சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!