கடந்த 2018ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்னும் சீரியலில் வினோதினி என்னும் காரெக்டரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ரித்திகா. இதனை அடுத்து இவர் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இந்த சீரியல் மூலம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் குக்வித் கோமாளி, காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி பிரபல்யமானதோடு இதில் இவர் பாலாவுடன் சேர்ந்து செய்த சேட்டைகள் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
இதனை அடுத்து இன்னும் பல ஷோக்களில் பங்குபற்றி வரும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்தும் வருகின்றார்.
அந்த வகையில் தற்பொழுது தனது குடும்பத்துடன் முதன் முறையாக விமானத்தில் பயணித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!