• May 01 2024

படு ஓவராக உடையணிந்து பிரஸ் மீட்டுக்கு வந்த ரித்திகா... என்னம்மா இப்படி பண்ணீட்டீங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் 2016-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'இறுதிச் சுற்று' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையில் பாக்ஸிங் வீராங்கனையான இவர் தன்னுடைய அறிமுகப் படத்திலும் அதே கேரக்டரில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தினைப் பிடித்துக் கொண்டார்.



இந்த படத்தில் ரித்திகா சிங்கின் அமோகமான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு அவரது நடிப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தேசிய விருதும் இவருக்கு கிடைத்தது. முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற இவர் அடுத்ததாக மணிகண்டன் இயக்கத்தில் வெளியான 'ஆண்டவன் கட்டளை' என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவரோடு இணைந்து நடித்திருந்தார்.



இதனைத் தொடர்ந்து அரவிந்த் சாமியின் 'வணங்காமுடி' படத்தில் நடித்துள்ளார். எனினும் இப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்ததாக இவர் நடித்த படம் 'ஓ மை கடவுளே'. இப்படத்தில் அனு என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரித்திகா. இப்படத்தில் அவரை அசோக் செல்வன் 'நூடுல்ஸ் மண்ட' என்று கேலி செய்வார். அந்த பெயர் பாப்புலர் ஆனதால் இவரை அன்றிலிருந்து நெட்டிசன்களும் செல்லமாக 'நூடுல்ஸ் மண்ட' என்றே அழைத்து வருகின்றனர்.



இந்நிலையில் ரித்திகா நடிப்பில் தற்போது 'கொலை' என்ற படம் உருவாகி உள்ளது. இயக்குநர் பாலாஜி கே குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரித்திகா. இப்படத்தின் உடைய பிரஸ் மீட் ஆனது நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றிருந்தது.



அந்நிகழ்விற்கு படு கிளாமரான கவர்ச்சி உடையில் கலந்து கொண்டிருந்த ரித்திகா போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தி உள்ளார்.  இவரால் எடுக்கப்பட்ட இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதுமட்டுமன்றி "பிரஸ் மீட்டிற்கு இப்படியா உடை அணிந்து போவீங்க" எனக் கூறி ரசிகர்கள் பலரும் தமது எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர்.




Advertisement

Advertisement

Advertisement