• May 07 2024

"நமக்கு சோறு தான் முக்கியம்"- பாரிஸில் ப்ரியா பவானி சங்கர் செய்யும் அட்டகாசம்- நக்கலான கமெண்ட் அடித்த பிரபல நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகியவர் தான் நடிகை ப்ரியா பவானி சங்கர். ,தனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

பின்பு கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். சமீபத்தில் ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார்.

கடைசியாக யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்திலும், குருதி ஆட்டம் படத்தில் வெண்ணிலா எனும் கதாபாத்திரத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.

இந்நிலையில் இன்று நடிகை ப்ரியா பவானி சங்கர் விமானம் மூலம் ஓமன் வழியாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்றுள்ளார். பாரிஸ் நகரில் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் பாரிஸ் நகர வீதிகளில் பிரான்ஸ் உணவுகளை சாப்பிடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு நடிகர் அசோக் செல்வன் நகைச்சுவையாக "நமக்கு சோறு தான் முக்கியம்" என போஸ்ட் செய்துள்ளார்.

ப்ரியா பவானி சங்கரின் பிரான்ஸ் சுற்றுலா புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், பத்து தல, பொம்மை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement