• May 01 2024

மகாலக்ஷ்மியின் கனவை நனவாக்கியுள்ள ரவீந்தர்- அவரே சொன்ன விஷயம்...குவியும் வாழ்த்துக்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

லிப்ரா ப்ரடெக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தரும் சீரியல் நடிகையான மகஹாலக்ஷ்மியும் திருமணம் செய்து கொண்டு இன்றுடன் 28 நாட்கள் கடந்து விட்டது. ரவீந்தர் தயாரிப்பில் உருவாகும் விடும் வரை காற்று படத்தில் நடித்த போது மகஹாவுக்கும் ரவீந்தருக்கும் இடையே காதல் பற்றியது.

 கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் திருப்பதியில் இம்மாதம் முதலாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னையை அடுத்த மகாபலிபுரத்திலுள்ள ரெசார்ட்டில் ஹனிமூனை கொண்டாடிய அவர்கள் பின்னர் ஹனிமூன் செல்லாமல் பேட்டி கொடுத்து வந்த நிலையில் தற்போது  கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றனர்.



அந்த வகையில் சமீபத்தில் இருவரும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இருவரும் ஜோடியாக விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றுள்ளனர். அந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் அந்த புகைப்படங்களும் வெளியானது.

இவ்வாறுஇருக்கையில் ரவீந்தர் மஹாலக்ஷ்மி வீட்டில் விசேஷம் நடந்துள்ளது. அதாவது மஹாலக்ஷ்மி அணிந்திருந்த மஞ்சள் கயிறை பிரித்து கோர்த்துள்ளனர். இதுவரை நயன்தாரா ஸ்டைலில் மஞ்சள் கயிறுடன் போஸ் கொடுத்து வந்தார் மஹாலக்ஷ்மி. இதனை நெட்டிசன்கள் கூட கிண்டலடித்தனர்.



ஏன் ரவீந்தரும் தான் தாலி செயின்தான் போட நினைத்தேன் ஆனால் மஹாலக்ஷ்மிதான் மஞ்சள் கயிறு போட்டுக்கொள்ள வேண்டுமென ஆசைப்பட்டார் என்றார். மேலும் எல்லாம் நயன்தாரா மேடத்தால் வந்தது, அவர்தான் மஞ்சள் கயிறுடன் போஸ் கொடுத்து வருகிறார் என்று மஹாலக்ஷ்மியை கிண்டலடித்தார்.



இந்நிலையில் மஹாலக்ஷ்மியின் மஞ்சள் கயிறை மாற்றி தாலி சரடில் கோர்க்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதனை ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் கணவன் மனைவி இருவரும் மாலையும் கழுத்துமாக உள்ள புகைப்படத்தையும்  பகிர்ந்துள்ளார் ரவீந்தர். இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






Advertisement

Advertisement

Advertisement