சின்னத்திரையில் பல சீரில்களில் நடித்து பட்டிதொட்டி எங்கும் கலக்கியவர் தான் சீரியல் நடிகை மஹாலட்சுமி.இவர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் இருக்கிற நிலையில் கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றார்.
அதன்பின் சீரியல் நடிகர் ஈஸ்வருடன் தொடர்பு என அவரது மனைவி ஊடகம் முழுவதும் பேட்டி கொடுத்து இருவரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். அதை கணக்கில் எடுக்காமல் விட்டு நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த மஹாலட்சுமி லிப்ரா பிரடொக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை 2 வருடங்களாக காதலித்து வந்தார்.
ரகசியமாக காதலித்து வந்த இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இருவரின் திருமணம் மிகப்பெரியளவில் பேசப்பட்டு இணையத்தையே அதிரவைத்தனர்.
அத்தோடு இருவரும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அடுக்கடுக்காய் பேட்டி கொடுத்து வந்தனர்.
திருமணம் குறித்து விளக்கமும் காரணத்தையும் கூறி இருவரும் தற்போது வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இவ்வாறுஇருக்கையில் இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். தற்போது மகாலட்சுமி தன் கணவர் ரவீந்தருக்கு கன்னத்தில் இறுக்கமாக முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் கடவுளே உனக்கு கண் இல்லையா என்று கூறுவதோடு உங்களின் ரூமில் நடக்கும் விசயங்களை இப்படியா பதிவிடுவது தனிப்பட்ட புகைப்படங்களை ஏன் இப்படி இணையத்தில் பதிவிடுகிறீர்கள் என்று கடுமையாக தாக்கி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Listen News!