• May 07 2024

நீதிமணியின் நெஞ்சில் கால் வைத்து அழுத்தி மிரட்டிய சங்கிலி- பூஜாவால் ரங்க நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

 நீதிமணியின் சொத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று மருத்துவமனையில் அக்காவிடம் ஆலோசித்து சங்கிலி பத்திரம் ரெடி செய்ய சொல்கிறான்.அடுத்து சரண்யா பூஜாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கும் செய்தியை சக்தியிடமும் வெற்றியிடமும் சொல்லி இனி உங்களுக்கு நல்லது தான் என்று சொல்ல இதை பூஜா கேட்டு விடுகிறாள்.


அதன் பிறகு சங்கிலி  பத்திரம் ரெடி செய்து நீதிமணியை நெஞ்சில் கால் வைத்து அழுத்தி மிரட்டுகிறான். சீக்கிரம் கையெழுத்து போடவில்லை என்றால் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்று விடுவேன் என்று புஷ்பாவும் மிரட்டுகிறாள்.

பூஜா குடிப்பது, புகைப்பது போல் போட்டோக்களை எடுத்து தன் தோழியை வைத்து சக்தியின் செல்போனில் இருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புகிறாள். மறுபக்கம் கோகிலா சக்திக்கு போன் செய்து கூடுதலாக நகை வேண்டும் அது விஷயமாக நேரில் பேச வேண்டும் என சொல்கிறாள்.


அடுத்து பூஜாவின் மாப்பிள்ளை வீட்டார் வந்து பூஜா மாதிரி பெண்ணை உன் மகனுக்கு கல்யாணம் செய்வீர்களா என்று கூறி, செல்போனுக்கு வந்த புகைப்படத்தை ரங்கநாயகியிடம் காட்டி அவளை அவமானப்படுத்தி விட்டு கிளம்பி போகின்றனர்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை காணத்தவறாதீர்கள்.

Advertisement

Advertisement

Advertisement