• May 08 2024

போலீஸ் தான் அதை மீட்டுக் கொடுக்கணும்... ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பரபரப்பு புகார்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கியமான பிரபலங்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் ராஜ்கிரண். இவரின் மகள் ஜீனத் 'நாதஸ்வரம்' சீரியல் மூலம் பிரபலமான நடிகரை முகப்புத்தகம் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் இந்தத் திருமணமானது இணையத்தில் பலவிதமான சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. 


அதாவது சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று 'நாதஸ்வரம்'. திருமுருகன் இயக்கிய இந்த சீரியலில் சம்மந்தம் என்கிற காமெடி ரோலில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் முனீஸ் ராஜா. இவர் நடிகர் சண்முகராஜனின் உடன் பிறந்த தம்பி ஆவார். முனீஸ்-ஜீனத் தம்பதிகளின் திருமணம் சர்ச்சைகளை கிளப்பியதை தொடர்ந்து ராஜ்கிரண் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.


அதில் அவர் குறிப்பிடுகையில் 'பிரியா என்னுடைய சொந்த மகளே அல்ல. வளர்ப்பு மகள். இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும், எவ்வித சம்பந்தமோ தொடர்போ இல்லை' என தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து ராஜ்கிரணின் இரண்டாவது மனைவி கதீஜா, பிரியா 17 சவரன் நகை மற்றும் குடும்பத் தாலியை எடுத்து சென்றுவிட்டதாகவும், ராஜ்கிரண் மீது அவதூறு பரபரப்புவதாகவும் புகார் ஒன்றினை அளித்தார். இதுதொடர்பான விசாரணை முசிறி டிஎஸ்பி அலுவலத்தில் நடைபெற்றிருந்தது. 


ஆனால் அப்போது கதீஜா தரப்பில் எவருமே ஆஜராகாததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய பிரியா "கதீஜா ராஜ்கிரண் இப்போது மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் எனக்கு டார்ச்சர் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. 

இதனால கடுமையான மன உளைச்சலுக்கு நான் உள்ளாகி இருக்கேன். எங்க போறதுன்னு தெரியாம ஆதரவு கேட்டு எங்க அப்பாகிட்ட போனா, அவர் மேலயும் புகார் கொடுத்துருக்காங்க. ராஜ்கிரண் சார் நல்லவரா இருந்தா, என்னை இப்படி தொந்தரவு செய்றதை கன்ட்ரோல் பண்ணியிருக்க முடியும்.

அதுமட்டுமல்ல அந்த வீட்டுக்கு நான் வேலைக்காரியாக இருக்கணும்னு தான் எல்லாருமே எதிர்ப்பார்க்குறாங்க. என்னைய என் கணவரோட தயவுசெஞ்சு சந்தோசமாக வாழ விடுங்க. என்னை தொந்தரவு பண்ணாதீங்க. எங்க அப்பா, தாத்தா பாட்டி கொடுத்த நகைகள் அவங்க வீட்ல இருக்கு. அதை போலீஸ் தான் மீட்டுக் கொடுக்கணும்" என சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

இதனால் இந்த விவகாரம் ஆனது தற்போது மறுபடியும் பரபரப்பை கிளப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement