• Sep 08 2024

சென்னை திரும்பிய ரஜினிகாந்த்.. தேர்தலில் வெற்றி பெற்ற 4 பேருக்கு வாழ்த்து..

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீக பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் நான்கு பேருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்மீக பயணமாக இமயமலை சென்றார் என்பதும் கேதார்நாத், பத்ரிநாத், பாபா புகை உள்ளிட்ட சில இடங்களில் அவர் சென்ற காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பிய நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தேர்தல் முடிவு குறித்து கேட்டபோது தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வராக பதவியேற்க இருக்கும் சந்திரபாபு நாயுடு மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஆகிய நால்வருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதன் பின் செய்தியாளர்களால் கேட்கப்பட்ட சில அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்த்த ரஜினிகாந்த், ஆன்மீக பயணம் நன்றாக இருந்தது என்றும் ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவம் ஏற்படும் என்றும் அதேபோன்று இந்த முறையும் தனக்கு நல்ல அனுபவம் ஏற்பட்டது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கூலி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement