• May 08 2024

நீ இந்த வீட்டு வேலைக்காரி தானே என செல்வியை அவமானப்படுத்திய ராதிகா- பாக்கியா கொடுத்த பதிலடி- ராதிகாவிடம் ஈஸ்வரி விட்ட சவால்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. எனவே இந்த சீரியலில் இன்றைய தினம் எனன்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ரூமுக்குள் கோபியை க் கூட்டிட்டு போன ராதிகா கோபியின் தோள் மீது சாய்ந்து எனக்கு நீங்க என்னை விட்டு போயிடுவீங்களோனு பயம் வந்துடுச்சு, நம்மளை பிரிக்க இவங்க சதி செய்யறாங்க. அதனால்தான் இப்படி ஒரு முடிவெடுத்தேன்.ராஜேஷை எதுக்காக விவாகரத்து பண்ணினேனு உங்களுக்கு நல்லாவே தெரியும், அதேபோல உங்கள எந்த சூழ்நிலையில் கல்யாணம் பண்ணேன் என்பதும் தெரியும். திரும்பவும் என்னுடைய வாழ்க்கை நாசமா போனா வெளியில் தலை காட்ட முடியாது என சொல்லி வருத்தப்பட கோபி உன்னுடைய நிலைமை எனக்கு நல்லாவே புரியுது ராதிகா என ஆறுதல் கூறுகிறார்.


மறுபக்கம் ஜெனி, அமிர்தா, செல்வி என எல்லோரும் பாக்யாவுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றனர். மேலே ராதிகா கோபியிடம் நீங்க சாப்டீங்களா என கேட்க நடந்த பிரச்சனையில் எப்படி சாப்பிட்டிருப்பேன், தொண்டை வறண்டு போய் இருக்கு குடிக்கக்கூட தண்ணி இல்ல வெளில போகவே பயமா இருக்கு என சொல்லிக் கொண்டிருக்க ராதிகா நான் போய் கொண்டு வருகிறேன் என்று கீழே இறங்கி வருகிறார்.

செல்வி ராதிகாவிடம் கோபமாக பேச நீ இங்க வீட்டு வேலைக்காரி தானே, வேலையை மட்டும் பாரு என சொல்ல பாக்கியா ராதிகாவுக்கு பதிலடி கொடுக்கிறார். இந்த இந்த வீட்ல யாரை எங்க வைக்கணுமா அங்க சரியாத்தான் வைத்திருக்கோம். யாரோ எங்கிருந்தோ வந்து எனக்கு பாடம் எடுக்க வேண்டாம் என செல்விக்கு ஆதரவாக பேசுகிறார்.

பிரண்டு பிரண்டுன்னு சொல்லிட்டு எனக்கு துரோகம் பண்ணவங்க மத்தியில இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்து நல்லது கெட்டது என எல்லாத்துலயும் என் கூட நல்ல பிரண்டா நிற்கிறார் செல்வி. இனியும் நிற்பா என செல்வி பற்றி பேசி பதிலடி கொடுக்கிறார். ஜெனி மற்றும் அமிர்தா என இருவரும் ராதிகாவுக்கு பதிலடி கொடுக்க ராதிகா வாட்டர் கேனில் தண்ணீரை நிரப்பி கொண்டு மேலே செல்லும் போது எதிரில் இனியா வந்து நிற்கிறார்.


பிறகு இங்கு வரும் ஈஸ்வரி உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும், இந்த வீட்டுக்குள்ளே வந்துட்ட என சொல்லி உன்ன இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பி கோபியை இங்கேயே வச்சிக்கிறேன் பாரு என சவால் விட பதிலுக்கு ராதிகா பாக்யாவை இந்த வீட்டிலிருந்து விரட்டி அடித்து உங்க வாயால நான்தான் உங்க மருமகள் சொல்ல வைக்கிறேன் என சவால் விடுகிறார்.


பிறகு ஜெனி செல்வி என எல்லோரும் ராதிகா பேசியது பற்றி கோபமாக பேசுகின்றனர். செல்வி பாக்யாவிடம் நீ எதுக்கு அக்கா அமைதியா இருக்க நீ அமைதியா இருந்தா ஏறி மிதிச்சு போயிட்டே இருப்பாங்க என சொல்ல நான் எதுக்கு அவங்க கிட்ட போய் பேசணும்? அவங்க யாரு எனக்கு? எனக்கு செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு, நாளைக்கு உலகம்  அழிஞ்சு போய்டாதே, யார் இங்கே இருக்காங்க யார் போறாங்கன்னு பொறுத்திருந்து பார்க்கலாம் என பாக்கியா பதில் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement