• May 05 2024

அமுதவாணனால் திடீரென கோபப்பட்ட ரச்சிதா...ஷிவினால் வெடித்த சண்டை..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் 86வது நானில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்...

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்.

இதில் Ticket To Finale சுற்றில் அடுத்தடுத்து நிறைய டாஸ்க்குகள் அரங்கேறி வருகிறது. இதில் வெற்றி பெறும் நபர்கள் ஒவ்வொரு சுற்று முடியும் போது புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தும் வருகின்றனர். இதற்கு மத்தியில், Debate டாஸ்க் நடந்திருந்தது. இதில் இரண்டு போட்டியாளர்கள் மாறி மாறி மேற்கொண்டிருந்த நிறைய விவாதங்கள் பெரிய அளவில் விறுவிறுப்பை எகிற வைத்திருந்தது.

அந்தவகையில் 83வது நாளில் முதலாவது டாஸ்க்  ஆக பண்ணு சாப்பிடுற டாஸ்க் வைத்து இருந்தாங்க.அதாவது ஒரு கால் நுனியில் கயிறு கட்டி இருந்து அந்த பண்ணை சாப்பிட வேண்டும்.அதில் அமுதவாணன் தான் அதிகமாக சாப்பிட்டு வின் பண்ணினார்.அத்தோடு அதிக ரைல்ஸ்களையும் அவரே பெற்று இருந்தார்.

அதன் பிறகு கண்ணை கட்டி நீச்சல் தடாகத்திற்குள் இருக்கும் காயின்ஸ்களை எடுத்து தங்களுடைய கண்ணாடி பெட்டிகளுக்குள் சேமிக்க வேண்டும்.அதில் அதிகமாக சேர்த்தவர் அசீம்.அதற்கு பிறகு ADK யிற்கு சாலேஞ் இட்டார்.அதே போல் ADK அந்த டாஸ்கை வெற்றி பெற்று அசீமின் காயின்களையும் பெற்றுக் கொண்டார்.

ரச்சிதா தான் சமைக்கிறாங்க.அதாவது அதில் அமுதவாணன் நீங்க எது செய்தாலும் கேவலமாக தான் இருக்கப்போகுது என்று சொல்ல ரச்சிதா கோவமடைந்தார்.அதாவது எதிலிலும் கோவப்படாத ரச்சிதா இதில் மட்டும் எப்படி கோவம் அடைந்தார் என்பது தான் தெரியவில்லை.

அதன் பிறகு சைக்கிள் ஓட்டும் போட்டி இடம்பெற்றதுஇஅதில் முதல் எலிமினேட் ஆனது கதிரவன்.அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் மாறி மாறி இருந்து சைக்கிள் ஓட்டிட்டு இருந்தாங்க.அதில் இரண்டாவது ஆக அசீம் எலிமினேட் ஆனாரு.இதனால் அசீம் கடுப்பில் கத்த ஆரம்பித்துவிட்டார்.இவ்வாறாக இன்றைய எபிசோட் முடிவடைந்தது.இதைப் பற்றி முழுமையான விபரத்தை அறிய கீழுள்ள காணொளியை கிளிக் செய்யவும்...











Advertisement

Advertisement

Advertisement