• May 05 2024

வீட்டை விட்டு கிளம்பிய ப்ரியா..கதறி அழும் ஜீவா..நடந்தது என்ன...வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜவே சீசன் 2. இதில் ஒரு வழியாக பார்த்திபனும் காவியாவும் ஒன்றினைந்து விட்டதோடு இருவரும் திருமண பந்தத்திலும் இணைந்து கொண்டனர்.

அடுத்து ஜீவாவும் தன்னுடைய காதலை ப்ரியாவிடம் சொல்லி விட்டார். இரண்டு ஜோடிகளும் இணைந்து விட்டதால் ரசிகர்களும் செம குஷியில் இருக்கின்றனர்.இருப்பினும் ரம்யாவுக்கும் அவரது அம்மாவுக்கும் காவியாவும் ஜுவாவும் தான் விரும்பினார்கள் எனத் தெரிந்து விட்டது.

இதனால் ரம்யாவின் அம்மா தேவி ஜீவாவும் காவியாவும் இணைந்து இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை திரையில் போட்டுக்காட்ட பார்த்தி மற்றும் பிரியா ஷாக்கடைகின்றார்.

இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதாவது தேவி பார்த்தியிடம் ...“இப்படியொரு நம்பிக்கை துரோகியோட வாழப்போகிறாயா..இல்லாட்டி என் பொண்ணோட சேர்ந்து வாழப்போகிறாய்” என கேட்கின்றார்.

இது ஒரு புறம் இருக்க  பிரியா வீட்டை விட்டு கிளம்பி போக ஜீவாவின் தந்தை பதறி அடித்து ஓடி வந்து ஜீவாவிடம் கூறுகின்றார்.எப்படியாவது சமாதானப்படுத்தி ப்ரியாவை கூட்டிட்டு கொண்டு வா என்று சொல்கின்றார்.

உடனே ஜீவாவும் பதறிஅடித்து ப்ரியாவிடம் சென்று மன்னிப்பு கேட்க ...பிரியா கதறி அழுது கொண்டு எல்லாம் காவியாவிற்காகத் தானே செய்தீங்க..காவியாவோட பிரதிபலிப்பாகத் தான் நீ செய்து இருக்கிறாய் ..” என வீட்டை விட்டு செல்கின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த  ப்ரமோ...



Advertisement

Advertisement

Advertisement