• May 03 2024

காவியாவிற்காக பங்ஷன் போக முடிவெடுத்த ப்ரியா... கடைசிவரை ஜீவாவை ஏற்றுக் கொள்ளவே மாட்டாரா..? பரபரப்பு திருப்பங்களுடன் 'ஈரமான ரோஜாவே-2'..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த சீரியல் ஆரம்பம் முதலே கதையில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளை வைத்து சுவாரஸியமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் ஜோசியர் 'வாற வெள்ளிக்கிழமை நாள் ரொம்ப நல்லா இருக்கு, அன்றைக்கே நீங்க தாலி பிரித்துக் கொடுக்கும் நிகழ்வை வைச்சுக்கலாம்" எனக் கூறுகின்றார். இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே அந்த நிகழ்வை நடத்த தீர்மானிக்கின்றார்கள்.


பின்னர் தாலி பிரித்துக் கொடுக்கும் பங்சனுக்கு ப்ரியாவையும் வருமாறு அழைக்கின்றனர். ஆனால் பிரியாவோ வர மாட்டேன் என மறுக்கின்றார். இருப்பினும் "நடக்கப் போகிறது உன் தங்கச்சியோட பங்சன் நீ தான் தலைமை தாங்கி நடத்தணும்" எனக் கூறியதும் பின்னர் ப்ரியாவும் 'எனக்கு ஜீவா மேல தான் கோபம் காவியா மேல இல்லை அதனால் நான் வருகிறேன் எனக் கூறி சம்மதிக்கின்றார். 


Advertisement

Advertisement

Advertisement