• May 09 2024

முதன் முதலாக தன்னுடைய பெண் குழந்தைகளுடன் திருப்பதிக்கு வந்த பிரபுதேவா- வெளியாகிய போட்டோ

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடன இயக்குநராக வலம் வருபவர் தான் பிரபு தேவா.தன்னுடைய தனித்துவமான நடனத்தால் ரசிகர்கள் மனதில் தனக்கென  தனி இடம்பிடித்தவர்.நடனம் மட்டும் இன்றி, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு போன்றவற்றிலும் இவர் ஆர்வம் காட்டி வந்தார்.

இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி ரமலதாவை விவாகரத்து செய்து விட்டு, நயன்தாராவை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்த்த நிலையில், நயன் - பிரபு காதல் தோல்வியில் முடிந்தது. பின்னர் கோலிவுட் திரையுலகில் இருந்து சில காலம் விலகி, பாலிவுட் பக்கம் சென்ற இவர் அங்கு அக்ஷய் குமாரை வைத்து இயக்கிய ரவுடி ரத்தோர் திரைப்படம் தாறுமாறு ஹிட் அடித்தது.


அடுத்தடுத்த பட பணிகளுக்காக பிரபு தேவா மும்பையில் வசித்து வந்த போது கொரோனா காரணமாக லாக் டவுன் போடப்பட்டது. அப்போது திடீர் என ஏற்பட்ட முதுகு வலிக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு பிரபு தேவா சென்ற போது, பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான ஹிமானி சிங் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம், பின்னர் காதலா மாறி 2020 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.


மிகவும் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்த நிலையில் பல மாதங்கள் கழித்து தான் இந்த தகவல் வெளியே வந்தது. மேலும் சமீபத்தில், ஹிமானி சிங் - பிரபு தேவா ஜோடிக்கு, அழகிய பெண் குழந்தை பிறந்த தகவல் வெளியானது. பிரபு தேவா  தற்போது முதல் முறையாக, தன்னுடைய குழந்தையுடன் சாமி தரிசனம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement