• May 05 2024

பொன்னியின் செல்வன் படத்தின் மூன்றாம் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?- மீண்டும் ஒரு புதிய சாதனை

stella / 1 year ago

Advertisement

Listen News!

எழுத்தாளர் கல்கியின் நாவலை மையமாக வைத்து நீணட நாள் முயற்சியின் பின்னர் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

அதே போல  நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபனும் நடித்துள்ளனர்.ஏ. ஆர் ரகுமானின் இசை இப்படத்திற்கு மிகவும் பலம் சேர்த்துள்ளது.


 5 பாக நாவல்களை கொண்ட இப்படத்தை 2 பாக படமாக எடுத்துள்ளார் மணிரத்னம்.அதில் முதல் பாகம் கடந்த மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகியுள்ள இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 

அந்த வகையில் முதல் நாளில் உலகளவில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்திருந்த இப்படம் இரண்டாம் நாள் முடிவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை தாண்டி சாதனை படைத்திருந்தது.இந்நிலையில், தற்போது மூன்றாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

 

அதன்படி விடுமுறை தினமான நேற்று இப்படம் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் மூன்று நாள் முடிவில் ரூ.230 கோடியை தாண்டி உள்ளது. மூன்றே நாளில் 200 கோடிக்கு மேல் வசூலித்த முதல் தமிழ்படம் என்கிற சாதனையையும் பொன்னியின் செல்வன் திரைப்படம் படைத்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement