• May 05 2024

வரலாற்று சாதனை செய்த பொன்னியின் செல்வன்- முதல் நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலா?- அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகாலமுயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம்.இப்படத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர்.

இப்படம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களிடையெ பாசிடிவ் விமர்சனங்களையே பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த படம் முதல்நாளில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருக்கலாம் என டிரேடிங் வட்டாரங்கள் கூறியிருந்தன.


இந்த நிலையில் சற்று முன் லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வசூல் நிலவரங்களை தெரிவித்துள்ளது.100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை ஒரே நாளில் 80 கோடி ரூபாய் வசூல் செய்த படம் எதுவும் இல்லை என்பதால் இந்த படம் வரலாற்று சாதனை செய்து உள்ளதாக கருதப்படுகிறது.


மேலும் இனி வரும் நாட்களிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வேற லெவலில் வசூல் சாதனை புரியும் என நம்பப்படுகின்றது. இதனால் படக்குழுவினர் செம குஷியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement