உலக அளவில் சுமார் 300 கோடி வரை வசூல் செய்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் கடந்த மாதம் 30ம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.தமிழகத்தில் இந்த திரைப்படம் குறைந்த நாளில் 100 கோடி வசூலை தாண்டிய திரைப்படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.
இப்படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கனை பெற்று வந்தாலும் நெக்கடிவ் விமர்சனங்களையும் குவித்து வருகின்றது எனலாம்.இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.அப்போது படம் குறித்தும், படத்தில் உள்ளவர்களின் நடிப்பு குறித்தும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
குறிப்பாக, ரஜினிகாந்த் தொலைபேசி உரையாடல் குறித்து நடிகர் ஜெயம் ரவி டுட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் "அந்த ஒரு நிமிட உரையாடல் என் நாளை, இந்த வருடத்தை, என் கெரியரை சிறப்பாக்கியது. உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் குழந்தைபோன்ற உற்சாகத்திற்கு நன்றி. உங்களுக்கு படமும், என்னுடைய performance-ம் உங்களுக்கு பிடித்திருந்தது எனக்கு நெகிழ்ச்சியானாது ரஜினி சார்" என ஜெயம் ரவி கூறி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றியும் படத்தில் தன்னுடைய நடிப்பு பற்றியும் பாராட்டியது ஆசீர்வதிக்கப்பட்டது போல் உணர்வதாக கூறியுள்ளார்.இவரின் இந்த பதிவு வைரலாகி வருவதைக் காணலாம்.
That 1 minute conversation made my day, my year and added a whole new meaning to my career. Thank you Thalaiva for your kind words & childlike enthusiasm. I’m overwhelmed, humbled & blessed to know you loved the movie & my performance 🙏🏼 @rajinikanth sir
Listen News!