• May 05 2024

மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை நவ்யா நாயர்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள, தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்துள்ள ஒரு இந்தியத் திரைப்பட நடிகையே நவ்யா நாயர். இவ்வாறாக பல மொழிகளிலும், பல படங்களில் நடித்துள்ள இவர் சிறந்த நடிகைக்கான கேரளா மாநில திரைப்பட விருதை இரண்டு முறையும், கலைமாமணி விருதையும் வென்றவர்.


அந்தவகையில் 'நந்தவனம்' என்ற மலையாளத் திரைப்படத்தில் ‘பாலாமணி’ என்ற கதாபாத்திரதில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த நடிகைக்கான் பிலிம்பேர் விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.


அத்தோடு பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே நடிகர் திலீப்புடன் இணைந்து கதாநாயகியாக 'இஷ்டம்' என்ற படத்தில் 2001இல் நடித்தார். அதன் பின்னரும் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்தார். அதுமட்டுமல்லாது மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம், திலீப், ப்ரித்விராஜ் மற்றும் ஜெயசூர்யா ஆகியருடன் ஜோடியாக நடித்துள்ளார்.


எது எவ்வாறாயினும் இவர் தமிழ் திரையுலகில் 'அழகிய தீயே' என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்ற 2009 ஆம் ஆண்டு வென்றிருந்தார்.


இவ்வாறாக பல படங்களில் பிஸியாக நடித்து வந்த நவ்யா நாயர் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சந்தோஷ் சிவன் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.  இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.


இந்நிலையில் இவரின் மகன் நேற்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement