• Apr 27 2024

கையில் கிளாசுடன் பிறந்த நாளில் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட போட்டோ- என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகும், அனைத்து தொகுப்பாளர்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இதில் மிகவும் ஸ்பெஷல்என்றால் அது டிடி தான்.

விஜய் டிவியில் செல்லப்பிள்ளை என அனைவரும் அழைக்கும் அளவிற்கு, தன்னுடைய இளம் வயதிலேயே விஜய் டிவியில் தன்னுடைய தொகுப்பாளர் பணியை துவங்கிய டிடி, பலமுறை சிறந்த தொகுப்பாளர் காண விருதை பெற்றுள்ளார்.திவ்யதர்ஷினி தொகுப்பாளராகவும் சின்னத்திரையில் காலடி எடுத்து வைக்க உறுதுணையாக இருந்தவர் இவரின் சகோதரி ஆன பிரியதர்ஷினி தான்.


திவ்யதர்ஷினி தொகுப்பாளராக மட்டுமின்றி, ஆரம்பத்தில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை ராதிகா தன்னுடைய ராடான் நிறுவனம் மூலம் தயாரித்து நடித்த, அரசி, செல்வி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.பின்னர் விஜய் டிவிக்கு நுழைந்த டிடி, ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதன் மூலம் கிடைத்த பிரபலம், இவருக்கு சில வெள்ளித்திரை வாய்ப்புகளையும் பெற உதவியது.

ஆரம்பத்தில் சில படங்களில் இவரை ஹீரோயினாக நடிக்க வைக்க கூட சிலர் முயற்சி செய்த நிலையில், ஒரு சில காரணங்களால் அதனை அவர் தவிர்த்து விட்டார். பின்னர் ஜூலி கணபதி, நள தமயந்தி, பவர் பாண்டி, சர்வம் தளமயம், காபி வித் காதல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.


மிகவும் கலகலப்பான பட்டாம் பூச்சி போல் சிறகடித்து வந்த சிடியை சற்று மனஅழுத்ததில் ஆழ்த்தியது என்றால் அது அவரின் விவாகரத்து விஷயம் தான்.கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.


விவாகரத்துக்கு பின்னர் தான், ஃபேஷன் நிகழ்ச்சி, திரைப்பட நடிப்பு போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டி வந்த டிடி , காலில் அறுவை சிகிச்சை செய்துள்ள காரணத்தால் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.எனினும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி, அவ்வப்போது விதவிதமான உடையில் போட்டோ சூட் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 


அந்த வகையில் இவர் இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். இதனால் இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வந்தனர்.அந்த வகையில் நன்றி சொல்லும் விதமாக ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் எனது பிறந்தநாளில் நீங்கள் செலுத்திய அனைத்து வாழ்த்துகளுக்கும் அன்புக்கும் நன்றி.


எல்லா கதைகளையும் பார்த்தேன், Watsapp msgs எல்லாவற்றையும் திருத்துகின்றது, அது என்னை மிகவும் கவர்ந்தது மற்றும் எனக்கு அபரிமிதமான பலத்தை அளித்தது, இந்த காதல் அனைத்தும் எனக்கு உலகம் என்று அர்த்தம், சில நேரங்களில் நான் ஏன் இவ்வளவு அன்பைப் பெறுகிறேன், நான் புன்னகைக்கிறேன், கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் ,உன் கால்கள் வலுவிழந்தால் என்ன செய்வது, ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு உங்கள் கைகளை வலிமையாக்குங்கள்,என்றும் அதில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement