• May 07 2024

திடீரென வீட்டில் ஏற்பட்ட சோகம்-கண்ணீர் விட்டு கதறிய பிரபாஸ்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரெபல் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த மூத்த நடிகர் கிருஷ்ணம் ராஜு  தனது 83வது வயதில் இன்று மரணமடைந்துள்ளார். 

கிருஷ்ணம் ராஜுவின் உறவினரான நடிகர் பிரபாஸ், தங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் மறைவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

நடிகர் பிரபாஸுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.



ரெபல் ஸ்டார் என டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வந்த மூத்த நடிகர் கிருஷ்ணம் ராஜு வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் காலமானார். அவரது மறைவு செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசியலில் ஆர்வம் கொண்ட கிருஷ்ணம் ராஜூ, இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மறைந்த பிரதமர் வாஜ்பாய் அரசில் அமைச்சராகவும் பதவி வதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



அத்தோடு நடிகர் பிரபாஸின் அப்பா சூர்யாநாராயண ராஜுவின் அண்ணன் தான் நடிகர் கிருஷ்ணம் ராஜு. தனது பெரியப்பாவுடன் பெரிய பாண்டிங்கில் எப்போதும் இருந்து வந்த பிரபாஸ், இன்று அவரது மறைவால் ரொம்பவே மனம் வாடி உடைந்து போயுள்ளார். பெரியப்பாவின் உடலை பார்த்ததும் தாங்க முடியாத சோகத்தால் கண்ணீர்விட்டு கதறி அழுது விட்டார்.



தனது பெரியப்பா உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் நடிகர் பிரபாஸ் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள்  சமூகவலைத்தளத்தில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. நடிகர் பிரபாஸுக்கு டோலிவுட் ரசிகர்களையும் தாண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

கிருஷ்ணம் ராஜு காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்த டோலிவுட்டும் துடித்துப் போனது. சைமா விருது விழாவால் சந்தோஷமாக இருந்த அல்லு அர்ஜுன் முதல் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு மகேஷ் பாபு மற்றும் பவன் கல்யாண் உள்ளிட்டோர் நேரடியாக சென்று நடிகர் பிரபாஸுக்கு ஆறுதல் கூறிய நிலையில், அவர்களுக்கு பிரபாஸின் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். நாளை முழு அரசு மரியாதையுடன் கிருஷ்ணம் ராஜுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement